வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை மாபெரும் வேலை நிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகவுள்ளதாக தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

20,000 ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளை உடனடியாக தீர்க்கக் கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடாளவிய ரீதியில் உள்ள ஒட்டுமொத்த அரச சேவைகளும் வீதியில் இறங்குவதற்கு தயாராக இருப்பதாகவும், தனியார் துறை, அரச துறை உட்பட அனைத்து ஊழியர்களும் 20,000 ரூபாவை அதிகரிக்குமாறு கோரி இதேபோன்ற தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: webeditor