ஜரோப்பிய மக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அதன் விளைவாகத் தோன்றியுள்ள போர்க்காலப் பொருளாதார நிலையை ஏற்றுக்கொள்ள மக்களை தயாராகுமாறு கூறியுள்ளார்.

நாட்டின் தென் கிழக்கே Provence-Alpes-Côte dAzur இல் அமைந்துள்ள Bormes-les-Mimosas என்ற கிராமத்தை 1944 இல் ஜேர்மனியப் படைகளிடம் இருந்து மீளக் கைப்பற்றியதன் 78 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபொதே அதிபர் மக்ரோன் மேற்கண்டவாறு கூறியிருந்தார். அதேவேளை , சில நாட்களுக்கு முன்பு உக்ரைன் அதிபருடனும் நேற்று ரஷ்ய அதிபர் புடினுடனும் தொலைபேசியில் பேசியிருந்தார்.

போரை சமாதான வழியில் நிறுத்துவதற்கான எந்த சமிக்ஞைகளையும் இரு தலைவர்களும் அச்சமயம் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அதன் பிறகு உரையாற்றியிருக்கும் மக்ரோன், உக்ரைன் யுத்தம் நீடிக்கப் போகிறது.

விளைவுகள் வரும் குளிர் காலத்தில் மிகக் கடுமையாக இருக்கப் போகிறது என்பதை தற்போது நினைவு படுத்தினார்.

எனவே எதிர்வரும் காலங்களை ஏற்றுக்கொள்ளவும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்க்கவும், சில சமயங்களில் எளிதாக்கவும் ஒற்றுமையாக நமது சுதந்திரம் மற்றும் ஐரோப்பாவின் மதிப்புகளுக்கான விலையைச் செலுத்த ஒப்புக்கொள்ளவும் ஆன்மாவின் வலிமை தேவைப்படும் எங்கள் மக்களைப் பற்றி நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை பெப்ரவரி 24 இல் ரஷ்யா தோடக்கிய கொடிய தாக்குதல் சில மணி நேரங்களுக்குள் போரை ஐரோப்பிய மண்ணின் எல்லைக்குள் கொண்டுவந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பழைய பழிவாங்கல் எண்ணத்துடன் ஒரு நாட்டின் இறைமையை மீறி நடத்தப்படுகின்ற இந்த வன்முறைக்கு எதிராகத் தாக்குப் பிடித்து தற்காப்புச் செய்கின்ற உக்ரைன் மக்கள் ஹீரோக்களாக மதிக்கப்படவேண்டியவர்கள் என்றும் மக்ரோன் கூறினார்.

இதேவேளை, உக்ரைனின் தென் பகுதியில் அமைந்துள்ள ஸேபோறிஷியா அணு மின் ஆலையை (Zaporizhzhia plant) ஐ. நா. பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கு ரஷ்யா அதிபர் புடின் இணங்கியுள்ளார் பிரான்ஸ் அதிபர் மக்ரோனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதே புடின் இதனை ஏற்றுக்கொண்டார் என்று கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிக்குள் அமைந்தள்ள அந்த அணு உலை எந்த சமயத்திலும் தாக்கப்படக் கூடிய முன்னரங்கில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய படைகளை அங்கிருந்து வெளியேற்றி அங்கு அமைதி வலயம் ஒன்றை உருவாக்க ஒத்துழைக்குமாறு ஐ. நா. சபையும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் கோரிகை விடுத்துள்ளன.

Recommended For You

About the Author: webeditor