யாழில் திடீரென மயங்கி விழுந்த கிராமசேவையாளர் உயிரிழப்பு!

யாழில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்(24) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான் சாந்தரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து உறவினர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டதாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor