“ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்”யாழ். பல்கலையில் திருமந்திர ஆன்மீக மாநாடு

அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ். பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை இணைந்து “ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் நடத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு எதிர்வரும் 28.10.2023 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சைவ சித்தாந்தத் துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த மாநாட்டிற்காக 50 திருமந்திரங்கள் தெரிவு செய்யப்பட்டு வடக்கு -கிழக்கு மலையகம் தழுவிய ரீதியில் அறநெறி மாணவர்களிடையே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சைவத் தமிழர்களது வாழ்வியலுடன் இணைந்ததாக திருமந்திரம் காணப்படுகின்றது. ஆகவே, திருமந்திரம் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட வேண்டும்.இதனை மையமாக கொண்டு வடக்கு – கிழக்கு மலையகம் தழுவிய ரீதியில் மாணவர்களிடையே நிகழ்நிலை ரீதியாக திருமந்திரப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இவ்வாரம் திருமந்திர வாரமாகவும் அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் யாழ். பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை பிரகடனப்படுத்தியுள்ளது.

 

இந்த வாரத்தில் திருமூலரது திருமந்திரத்தினை அறிதல், பிறருக்கு தெளிவூட்டுதல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கபட வேண்டும்.

எந்தவொரு விடயமும் முன்னெடுக்கப்படவேண்டுமாயின் கல்வி சமூகம் கை கொடுக்க வேண்டும் அதனடிப்படையில் யாழ். பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை , பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட யாழ் பல்கலைக்கழகம் அது உருவாக்கப்பட்டதன் நோக்கினை இந்த திருமந்திர மாநாட்டின் மூலம் தொடர்ச்சியான ஒரு நிலையை பேசுகின்றது.இதற்காக பல்கலைக்கழகத்திற்கும் சைவ மகா சபை நன்றியைத் தெரிவிக்கின்றது.

மேலும், வடக்கு – கிழக்கு மலையகம் தழுவியரீதியில் பல சைவ நிறுவனங்கள் இதற்கான ஆன்மீக விழிப்புணர்வு மாநாட்டிற்கு ஆதரவை வழங்கியுள்ளன.சாதாரண கிராமம் முதல் அனைத்து இடங்களிலும் இந்த திருமந்திர மாநாடு சென்றடைய வேண்டும்.

 

குறித்த மாநாட்டில் திருமந்திர மாநாட்டு மலர் ஒன்று வெளியீடு செய்துவைக்கபடவுள்ளது.இந்தியாவிலிருந்து ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி அருணை பாலறாவாயனும் இதற்காக கலந்துகொள்ளவுள்ளார்.காலை மற்றும் மாலை என இருபகுதிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள மநாட்டில் வருகை தருபவர்களுக்கும் மதிய போசனம் தயார்படுத்தபட்டுள்ளது.

குறித்த முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக சிவசிறீ சரவேஸ்வர ஐயர் பத்மநாதன் இந்து கற்கைகள் பீட பீடாதிபதி யாழ். பல்கலைக்கழககம்,செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன்,திருமிகு கிருஷ்ணபிள்ளை குணநாயகம் மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார திணைக்கள உத்தியோகத்தர்,கௌரவ விருந்தினர்களாக கலாநிதி சுகத்தினி திரு முரளிதரன் இந்து நாகரீகதுறை தலைவர் யாழ். பல்கலைக்கழககம்,திருமிகு நாகையா வாமன் தலைவர் இந்து நாகரீகதுறை கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள அதேவேளை நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம்,தென்கையிலை ஆதீனம் ,மெய்கண்டார் ஆதீனம்,தருமை ஆதீன கிளைமடம் திருக்கேதீச்சரம், திருநாவுக்கரசர் ஆதீனம் நுவரெலியா,சிவகுரு ஆதினம் நல்லூர் ஆகியவற்றின் குரு முதல்வரும் பங்குபற்றவுள்ளனர்.

 

ஆகவே, குறித்த மாநாட்டிற்காக அனைத்துத் தரப்புக்களும் எம்முடன் இணைந்து பணியாற்றி திருமந்திரத்தை அடுத்த சந்ததிக்கு கடத்துவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN