பௌத்த பிக்கு மாணவன் கைது!

ரம்புக்கனை பிரதேசத்தில் உள்ள விஹரரை ஒன்றில் வசித்து வரும் மாணவ பிக்கு ஒருவர் T-56 மெகசீன்கள் மற்றும் 161 தோட்டாக்களுடன் கைதாகியுள்ளார். பிக்கு மாணவன் நேற்று வியாழக்கிழமை (19) மாலை கைது செய்யப்பட்டதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பௌத்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் பிக்கு என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கஞ்சா வைத்திருந்த பிக்கு
பிக்கு வசிக்கும் விஹாரையின் விஹாராதிபதி வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று இரண்டு மெகசீன்கள் மற்றும் தோட்டாக்களுடன் மாணவர் பிக்குவை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை இதற்கு மேலதிகமாக, 850 கிராம் கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தின் பேரில், விஹாரையில் வசித்து வரும் மற்றுமொரு பிக்குவும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor