ஹர்த்தாலை புறக்கணித்த மாணவர்கள்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதேவேளை வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாஹாணங்களில் நாளை பூரண கர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor