யாழில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறக் காரணமானவர்களைக் கண்டிக்கும் வகையில் 07 தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இன்று பூரண ஹர்த்தால் – கதவடைப்பு பொது முடக்கத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் யாழ். மாநகர சபைக்கு ட்பட்ட யாழ். மத்திய பேருந்து நிலையம், யாழ். கஸ்தூரியார் வீதி,ஸ்ரான்லி வீதி,ஆஸ்பத்திரி வீதி,முனீஸ்வர் கோவில் வீதி, கே.கே.எஸ். வீதி, தெல்லிப்பழை பகுதியிலுள்ள வியாபார, நகை கடைத்தொகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

 

இதேவேளை அரச நிறுவனங்கள், சில தனியார் நிறுவனங்கள் திறந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: S.R.KARAN