பணப் பரிசு பெற்றது மயிலணி சைவ வித்தியாலயம்

கடந்த வாரம் மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற விவசாயக் கண்காட்சியின் போது சிறந்த முறையில் முயற்சியாண்மையுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தை பாடசாலை வளாகத்தில் அமைத்ததுடன், சமூகத்திலும் விவசாய நவீன தொழில்நுட்பங்களை பரவலடையச் செய்தமை, மாணவர் ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் மேற்கொண்டமை போன்றவற்றை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மயிலணி சைவ வித்தியாலயத்திற்கு  ஒரு இலட்சத்து 50,000 ஆயிரம் ரூபா பெறுமதியான பண வவுச்சர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்  கு. திலீபன், வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் உட்பட வடக்கு மாகாண உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN