கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்ட தமிழர்

கனடாவில் வன்முறை மற்றும் ஆபத்தானவர் என்று வர்ணிக்கப்படும் 34 வயதுடைய நபர், நகரின் சமீபத்திய கொலை தொடர்பாக தேடப்பட்டு வருகிறார்.

கடந்த சனிக்கிழமை (21-08-2022) காலை 11:40 மணியளவில் க்ளென் எவரெஸ்ட் ரோடு மற்றும் கிங்ஸ்டன் ரோடு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்த போது ஒரு கட்டிடத்தின் முகப்பில் பலத்த காயங்களுடன் ஒருவர் அவதிப்படுவதைக் கண்டனர்.

துணை வைத்தியர்கள் அந்த நபரை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ரொறன்ரோவை சேர்ந்த 38 வயதான லியோன் டைரெல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபரான சதீஸ்குமார் ராஜரத்தினத்திற்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜரத்தினம் ஆயுதம் ஏந்தியதாக நம்பப்படுவதாகவும் அவர் வன்முறையாகவும் ஆபத்தானவராகவும் கருதப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Recommended For You

About the Author: webeditor