மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி கைது

விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மான் கறி தயாரித்துக்கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ​​அலவத்துகொட பொலிஸாரால் அச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மான் ஒன்று கொல்லப்பட்டுள்ளதாகவும் வீட்டில் மான் கறி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மீதமுள்ள மான் கறியை மீட்க முடியவில்லை. அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் உபுல் செனவிரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவொன்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin