ஹர்த்தால் எப்போது? தமிழ்த் தேசிய கட்சிகள் யாழில் ஆராய்வு!

ஹர்த்தால் எப்போது? தமிழ்த் தேசிய கட்சிகள் யாழில் ஆராய்வு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்று இணைந்து வடக்கு –  கிழக்கு ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்றைய தினம் அனைத்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் தந்தை செல்வா கலையரங்கில் ஒன்று கூடியுள்ளனர்.

 

குறித்த கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர்களான விக்னேஸ்வரன், சித்தார்த்தன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். கே. சிவாஜிலிங்கம் மற்றும் பொது அமைப்புக் களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளதோடு ரெலோ சார்பில் எவரும் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Recommended For You

About the Author: S.R.KARAN