பாடசாலையில் உயிரிழந்த மாணவன் பெற்றோர் போராட்டம்!

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருந்த மின் விசிறியால் தவறுதலாக உயிரிழந்த நிலையில் பெற்றோர்கள் சிலர் பாடசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் உயிரிழந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி இப் போராட்டம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மாணவர்களின் பாதுகாப்புகருதி புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் இன்று கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை என்றும் கல்லூரி சமுகமளித்திருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் திருப்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மின் விசிறியால் பறிபோன உயிர்

பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு
அத்தோட அக் கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இன்று பாடசாலைக்கு வரவுள்ளதாகவும் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கலந்துரையாடலின் பின்னரே அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அம் மாணவனின் வகுப்பாசிரியரை இடமாற்ற வேண்டும், அக் கல்லூரியின் அதிபரை இடமாற்ற வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாகவும் அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor