மீண்டும் ஆட்சிக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை மஹிந்த ராஜபக்ச

ஆட்சிக்கு மீண்டும் வரும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய தலைமைத்துவத்துடன் கட்சி ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (04-10-2023) காலை கொழும்பு கோட்டை ஸ்ரீ சம்புத்தாலோக மகா விகாரைக்கு விஜயம் செய்த மஹிந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான எதிர்பார்ப்பு உள்ளதா என்று ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பினர், “அப்படி எதுவும் இல்லை. நான் நாட்டை போதுமான அளவு ஆட்சி செய்தேன். புதிய தலைமை உருவாகி முன்னேற வேண்டும்” என்றார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்து கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர், தற்போதைய ஜனாதிபதியுடன் தான் உடன்படுவதாகவும், மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஊடகங்களை தணிக்கை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் கூறுவதையும் அவர் மறுக்கிறார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,

மக்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்கும் இந்த வேளையில் அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலத்திலிருந்து நாங்கள் மக்கள் பக்கம் தான் இருந்தோம் என்றார்.

இதேவேளை, தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்கத்திற்கு சில ஆலோசனைகளை வழங்க முடியாதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசாங்கம் என்னிடம் ஆலோசனை கேட்டால், நிச்சயமாக என்னால் வழங்க முடியும். ஆனால் நான் அதை அவர்கள் மீது கட்டாயப்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor