சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிகாரியின் வேலை பறிப்பு!

பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு குடாப்பாடு பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இந்த மோசடி சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட பெருந்தொகை
குறித்த பொலிஸ் பரிசோதகரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை பணத்தில் ஒரு பகுதியை அவர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பரிசோதகரால் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 4 இலட்சம் 20 ஆயிரம் ரூபாய் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தாமல் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணையை மேற்கொண்டு உதவி பொலிஸ் பரிசோதகர் பணியை இடைநீக்கம் செய்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor