சரத் வீரசேகர மீது சரவணபவன் சந்தேகம்!

இனவாதத்தை கக்கி இன்று சிங்கள மக்களை தூண்டிவிட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டினை விட்டு வெளியேறியிருக்கக்கூடிய நீதிபதி சரவணராஜாவின் வெறியேற்றத்திற்கு மூலகாரணமாக செயற்பட்ட சரத் வீரசேகர வடக்கில் கட்டளை தளபதியாக செயற்பட்ட பொழுது அதிகளவு எமது தமிழ் உறவுகள் காணாமலாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே சிந்திக்க தோன்றுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இன்று மானிப்பாய் – சுதுமலையில் இடம்பெற்ற இரண்டாம் மொழிக்கற்கைகள் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
இந்த மொழியினை நாங்கள் தமிழர்கள் எதிர்க்கவில்லை . எம்மை  எதிர்க்க பண்ணினார்கள். பண்டாரநாயக்கா தனிச்சிங்கள சட்டம் கொண்டுவந்த போது நாங்கள் முழுமையாக எதிர்த்தோம். இன்று இதனை ஒரு பாலம் அமைத்து செயற்பட கருஜெயசூரிய தொடர்சியாக செயற்பட்டு வருகின்றார்.
நல்லாட்சி காலத்தில் பல விடயங்களை செய்தருக்கின்றார் . நல்லிணக்கம் பற்றி எப்பொழுதும் பேசுபவர் ஒரு இனவாதியாக செயறபடாதவர். சபாநாயகராக இருந்தவர் இருந்த பொழுதும் அவர் சுயநலமாக செயற்பட்டவர் கிடையாது அனைவராலும் அவர் மதிக்கப்பட்டவர்.ஆனால் இன்று என்ன நடக்கின்றது? சரத் வீரசேகர போன்ற இனவாதி  தனது பேச்சுக்கள் மூலம்  நீதபதிக்கு எதிராகசிங்கள மக்களினை பௌத்த துறவிகளினை தூண்டிவிட்டு இன்று அவர் உயிர்அச்சுறுத்தல் காரணமாக   பதவியினை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்.
நான் நினைக்கவில்லை சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறான ஒரு கடித்தினை இதுவரை காலமும்  பெற்றுகொண்டிருக்காது. செம்மணிப் படுகொலை புதைகுழி மீட்பின் போது செயற்பட்ட  நீதிபதி அருள்சாகரன்  இவ்வாறு அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இன்று காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக வடக்கில் அப்பொழுது கட்டளை தளபதியாக செயற்பட்ட சரத் வீரசேகரவின் காலத்தில் தான் அதிகமானோர்கள் காணாமலாக்கப்பட்டிருப்பார்கள் போல தெரிகின்றது .
ஆகவே, இவ்வாறான பிரிவினைகளை தடுப்பதற்கு இரண்டாம் மொழியின் தேவை இருக்கின்றது. அபிவிருத்தி நோக்கி செல்வதற்கு சிங்களம் தேவையாக இருக்கின்றது. மொழிக்கும்  எங்களுக்கும் அரசியல் பகைமை இல்லை. இது அவர்களால் அன்று உருவாக்கப்பட்ட சட்டமூலங்களினாலே எம்மை எதிர்க்க வைத்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: S.R.KARAN