தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று மீண்டும் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று 28 ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகி நாளை மாலை 6 மணிக்கு நிறைவு பெறும்.
எனவே இதில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN