முல்லைத்தீவில் தீக்கிரையான கடை

முல்லைத்தீவு – பாலிநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை கடையொன்று தீக்கிரையாகியுள்ளது.

சம்பவத்தில் ‘வசி ஸ்டோஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த கடையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.

இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டனர்.

எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor