பிரித்தானியா செல்லும் அகதிகளை தடுக்க புதிய யுக்தி!

ஆங்கிலக் கால்வாயை தொடும் முகத்துவாரத்தில் பாரிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மிதப்பு கட்டைகள் கொண்டு புதிய தடை ஒன்றை Pas-de-Calais பொலிஸார் ஏற்படுத்தி உள்ளனர்.

பிரான்சில் இருந்து பிரித்தானிய செல்லும் அகதிகளை தடுக்க பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.

பிரான்ஸின் புதிய யுக்தி
இந்த நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த தொண்டு நிறுவனத்தின் ஆர்வலர் Pierre ROQUES கூறுகையில் ,

‘இத்தகைய தடைகள் பிரித்தானியா செல்ல முயற்சிக்கும் அகதிகளின் எண்ணத்தில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக இருப்பதை விட அதிகமான உயிர் ஆபத்தையே ஏற்படுத்தும்.

கடத்தல்காரர்கள் இந்த தடையை கடக்க தங்கள் பயணத்தின் திசையை மாற்றுவார்கள், அது தூரப்பயணமாக இருக்கும் இது ஆபத்தானது’ என கூறுகிறார். கடந்த 2022ம் ஆண்டு தங்கள் உயிரைப் பணயம் வைத்து 52 000 அகதிகள் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற நிலையில் Pas-de-Calais பொலிஸாரால் தடுக்கப்பட்டிருந்தனர்.

எனினும் அவர்கள் பிரித்தானியா செல்ல மீண்டும், மீண்டும் முயற்சித்து வருவதும், பலவேளைகளில் உயிராபத்துக்கள் ஏற்படுவதும் Pas-de-Calais மாவட்டத்தில் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor