யாழில் 54 வயது குடும்பஸ்தரை அடித்து கொன்ற பொது மக்கள்!

யாழ்ப்பாணத்தில் 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பொதுமக்கள் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் (07-08-2023) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு கூறினர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் இன்று ஊருக்கு வந்தவேளை மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்தவேளை, வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெகதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor