வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்து வர இருக்கும் சாகச வீரர்கள்

சிங்கப்பூரிலுள்ள பிரபல சாகச மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ‘Go Bungy’ ஆண்டுதோறும் 10,000 சாகச வீரர்களை இலங்கைக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை தாமரைக் கோபுர முகாமைத்துவத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

உலகில் உள்ள சுமார் 50,000 பங்கி வீரர்கள் அந்த நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும், அவர்களைத் தொடர்புகொள்வதற்கான ஒப்பந்தத்தில் ‘Go Bungy’ நிறுவனமும் தாமரைக் கோபுர நிர்வாகமும் கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இந்த ஆண்டின் இறுதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor