தேரரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

இலங்கையில் உள்ள காலி மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தேரர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே நேற்றைய தினம் (31-07-2023) உத்தரவிட்டுள்ளார்.
இதனை அவதானித்தஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ததுடன் சிறுமியை கராபிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதனை தடயவியல் மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்த நிலையில் விஹாராதிபதியை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor