அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு போராட்டம்

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பு இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!!

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத அதிகாரப் பகிர்வை உறுதி செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்ட 100 நாள் செயல் திட்டத்தின் ஓராண்டை முன்னிட்டு குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (31-07-2023) வடக்கு – கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த போராட்டமானது பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் ஏற்பாட்டில் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதில் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN