சீன கப்பல் விவகாரத்தில் இந்திய பிரமுகர் வெளியிட்டுள்ள கருத்து!

சீன கப்பல் விவகாரத்தை பெரிதுபடுத்தக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் இரண்டு விடயங்களை செய்ய பழகவேண்டும், ஒன்று இலங்கைக்கு இந்தியாவுடன் எந்த பாதுகாப்பு – இராணுவ கூட்டணியும் இல்லை, மற்றொன்று நாங்கள் இலங்கையுடன் இருக்கின்றோமா இல்லையா என்பது குறித்து நாங்கள் தெளிவாகவில்லை.

முன்னர் யுபிஏ அரசாங்கத்தின் போது விடுதலைப்புலிகள் காரணமாக திராவிட முன்னேற்ற கழகம் முக்கிய பிரச்சினையாக காணப்பட்டது.

விடுதலைப்புலிகள் இந்திய எதிர்ப்பாளர்களாக காணப்பட்ட போதிலும் திமுகவினர் அவர்கள் எங்கள் தமிழ் சகோதரர்கள் என தெரிவித்தனர்.

இந்த விடயத்தை பெரிதுபடுத்தக்கூடாது என நான் தெரிவிக்க விரும்புகின்றேன்’ என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor