பருப்பு என்ற பெயரில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பொருள்

பருப்பு என்ற போர்வையில் இலங்கைக்கு 39,000 கிலோகிராம் உழுந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கை சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48,000 கிலோ கடலை பருப்பு என கூறி 482,550 ரூபா சுங்க வரியாக செலுத்தப்பட்ட 2 கொள்கலன்களில் இந்த உழுந்து கண்டிபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட உழுந்தின் சந்தைப் பெறுமதி 62 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor