குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

குவைத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குவைத் பிரஜையான 21 வயதுடைய இளைஞன் ஒருவர் பொறுப்பற்ற முறையில் வாகனத்தை செலுத்திய நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தை ஏற்படுத்திய இளைஞன் தைமா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக குவைத்தை தளமாகக் கொண்டியங்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: webeditor