நபர் ஒருவர் இரும்புத்தடியால் தாக்கி கொலை!

இரும்புத் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் புத்தளம் நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தழுவ பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மாலை இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக உயிரிழந்தவரின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் தாக்கப்பட்ட நபர் வீட்டிற்கு வராத காரணத்தினால் குறித்த நபரை வீட்டு உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

மணல் திடலில் காணப்பட்ட சடலம்
இதன்போது தாக்கப்பட்ட நபர் வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள மணல் திடலில் சடலமாக காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது தலையில் பொல்லால் தாக்கிய காயங்களும் காலில் வெட்டுக்காயங்களும் காணப்பட்டதாக தடவியல் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர் பதுங்கிவிட்டதாகவும் மோப்ப நாயின் உதவியைக் கொண்டு சந்தேக நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் இதன்போது பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலைப் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor