யாழில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி!

பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வெல்லே சுரங்க எனப்படும் சுரங்க பிரதீப்புக்கு நெருக்கமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மட்டக்குளிய பிரதேசத்தில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்போது, அவரிடம் இருந்து சுமார் 1000 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

35 வயதுடைய சந்தேகநபர் இவ்வாறு போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் விற்பனையில் ஈடுபடும் ஒருவரென தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor