வெப்பமான காலநிலை குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் வெப்பமான காலநிலை காரணமாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடும் வெப்பம் காரணமாக, மக்கள் தாகம் எடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் வெப்பமான காலநிலை நிலவுவதே இந்த கோரிக்கை விடுப்பதற்கு காரணமாகும்.

பல மாவட்டங்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை வெப்பம் நிலவினாலும், அதை விட மனித உடல் வெப்பம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor