கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக செந்தில் தொண்டமான்!

ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் மே 2 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.

ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள்
அதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்படவுளதாக அறியமுடிகின்றது.

அதேவேளை மத்திய மாகாண ஆளுநர் பதவி முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ளதுடன் ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

எனினும், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தற்போதைய ஆளுநர் பதவி வகிப்பவர்கள் அப்பதவியில் நீடிப்பார்கள் எனவும் தெரியவருகின்றது.

Recommended For You

About the Author: webeditor