அடை மழையால் மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஹப்புத்தளை பகுதியில் பெய்த அடை மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் அதிர்ச்சியடைந்த தம்பேதன்ன மஹகந்த பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவர்கள் ஹப்புத்தளை பங்கெட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் மூவரும் வீட்டிலிருந்தபோதே மின்னல் தாக்கியதில் அதிர்ச்சியடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42, 21 மற்றும் 17 வயதுடைய மூவரே மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor