க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள டலஸ் அழகப்பெரும

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(25.04.2023) உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 600,000 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்கு முன்னேற முடியாத நிலை உள்ளது.

அநீதி இழைக்க மாட்டாது
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதைப் பற்றி பரிசீலித்து அதற்குப் பதிலாக அனைத்து மாணவர்களும் உயர்தரக் கல்வியை ஆரம்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் என பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழை வழங்க வேண்டும்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வைத்து எவரும் வேலைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பது உண்மையாகும். இதன் மூலம் எந்த மாணவர்களுக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.

லண்டன் முறை கல்வி தரங்கள் தொடர்பாக கோவிட் தொற்றுநோய்களின் போது இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக மாணவர்களுக்கு பெரும் சலுகை தனது முன்மொழிவை பரிசீலிக்குமாறு தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor