14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய காதலன் விளக்கமறியலில்!

14 வயதான சிறுமியை வன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய 21 வயதான காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெருடாவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமியுடன் காதல் வசப்பட்ட 21 வயதான இளைஞன் பல சமயங்களில் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்.

இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமி வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

இதையடுத்து இளைஞன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor