யாழ் நைனாதீவு மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

யாழ்ப்பாணம் – நயினாதீவில் கடந்த சில நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படாத நிலையில் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாக கூறப்படுகின்றது.

அனைத்து சேவைகளும் பாதிப்பு
வங்கிகள், பாடசாலைகள், வைத்தியசாலை, ஆலயங்கள் மற்றும் தபால் நிலையம் என அனைத்து நிறுவனங்களின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

நயினாதீவிலுள்ள மின் பிறப்பாக்கி பழுதடைந்தமையும், டீசல் இன்மையுமே இந்நிலைக்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, இந்நிலையில் தற்போது பழுதடைந்த இயந்திரம் திருத்தப்பட்டுள்ளதுடன் அதன் சேவையை படிப்படியாகவே அதிகரிக்க முடியும் எனவும் மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: webeditor