இளைஞர்களுக்கு இலவச ஆடு வழங்க ஜோசனை செய்யும் அரசு!

ஆடுகளை வளர்க்க விரும்பும் இளைஞர் சமூகத்தினருக்கு 70,000 ஆடுகளை இலவசமாக விநியோகம் செய்வதில் விவசாய அமைச்சு கவனம் செலுத்துகிறது.

அதன்படி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இந்த ஆடுகள் வழங்கப்படும்.

தேவையான தொழில்நுட்பம் மற்றும் உயர்தர ஆடுகளை வழங்குவதற்கு தனியார் துறையின் ஆதரவைப் பெறுவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இங்கு ஜம்னாபரி, கொட்டுகச்சி, போயர், சனான் ஆகிய ஆடு இனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor