வீட்டுக் கடன் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வீட்டுக் கடன் தொடர்பில் வீடமைப்பு அதிகார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 5 பில்லியன் ரூபா வீட்டுக்கடனை மீள அறவிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.

கடனை மீள அறவிடும் பணிகள்

பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமையால்,மக்கள் வீட்டுக் கடனை மீள செலுத்துவதை தவிர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மாவட்ட முகாமையாளர்கள் ஊடாக, கடனை மீள அறவிடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor