அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு – மருதானை மரியகடையில் உள்ள கடை ஒன்றில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 15,000 முட்டைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (12-04-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர், சோதனை நடத்திய அதிகாரிகள், அரசு நிர்ணயித்த 44 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில், முட்டை கையிருப்பை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor