பொறியியலாளர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்பு!

கொழும்பு – கஹதுட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதி வீடொன்றில் இருந்து ஆண் பொறியியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொறியியலாளர் சியம்பலாகொட பகுதியில் தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கஹதுட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

அப்பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பொறியியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கஹதுட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor