யாழில் மனநோயாளியின் தாக்குதலால் நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மனநோயாளி ஒருவரின் தாக்குதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் புத்தூர் சந்தி பகுதியில் இன்றைய தினம் (11-04-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை விடுதியிலிருந்து தப்பியோடி வந்து இந்த கொலையை செய்ததாக தெரியவருகின்றது.

இந்த கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

Recommended For You

About the Author: webeditor