யாழில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு!

யாழ். ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த HT 5084 இலக்கமுடைய நீல நிற ஹொன்டா சூப்பர் கப் 90 வகை மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.

ஆவரங்கால் சிவசக்தி மண்டபத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (10.04.2023) மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே திருடப்பட்டுள்ளது.

முற்பகல் 10.30 தொடக்கம் 12 மணியளவிலான காலப்பகுதியில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விபரம் அறிந்தவர்கள்

மோட்டார் சைக்கிள் தொடர்பான விபரம் அறிந்தவர்கள் உரிமையாளரான சு.பாலசுப்பிரமணியம் 0777655527 என்பவரது தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் யாழ். குடாநாட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: webeditor