பொது மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவதானத்துடன் செயற்பட வேண்டும்
கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன என்றும்,அதனால் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor