யாழில் இளைஞர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (08-04-2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதியால் காரில் சென்றுகொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வழிமறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இளவாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor