குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய பொலிசார் அதிரடி நடவடிக்கை!

பண்டிகைக் காலத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறியும் பொருட்டு இரத்தத்தில் உள்ள மதுவை கண்டறியும் சுவாசப் பரிசோதனை அலகுகள் நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுமார் 170,000 அலகுகள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது ஏற்கனவே 70,000 அலகுகள் பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை அடுத்த இரண்டு நாட்களுக்குள் அனுப்பப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor