நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை!

நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கான அடையாள அட்டை ஒன்றை விநியோகிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்புத்துறை வியாபாரச் சங்கம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,புத்தாண்டு காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்கான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

உடனடி தீர்வு
இதேவேளை நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கான அடையாள அட்டை ஒன்றை விநியோகிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிப்பதுடன் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கான குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸ் மா அதிபருடன் கலந்தாலோசித்து சாகல ரத்நாயக்க ,நடைபாதை வியாபாரிகள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor