ஜனாதிபதியால் புதிய குழு நியமனம்

நாட்டில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர, நிதி இராஜாங்க அமைச்சர், மாகாண ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக, மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து பணிகளையும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: webeditor