பூமணி அம்மா அறக்கட்டளையினரால் நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளிக்கு உதவி.

நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளிக்கு உதவி.!பூமணி அம்மா அறக்கட்டளையின் நிர்வாகிகளாகிய எம்மிடம் நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளியில் கல்வி பயிலும் பதினேழு முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவும்படி குறித்த முன்பள்ளியின் பொறுப்பாசிரியரும் நவாலி வடக்கு சனசமூக நிலையத் தலைவருமான திருமதி செந்தினி தருமசீலன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய,

அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் நிதி ஏற்பாட்டில் ரூபா முப்பதினாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை அறக்கட்டளையின் செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம்,ஆலோசகர் இ.மயில்வாகனம்,நிர்வாகசபை உறுப்பினர்,சா.தவசங்கரி ஆகியோர் இன்று வழங்கி வைத்தனர்.மேலும் இன்றைய நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி ராஜ்மோகன் கல்சியா,திருமதி தினேஸ் மைதிலி,நவாலி வடக்கு சனசமூக நிலைய நிர்வாகிகளான,போசகர்,திரு தர்மலிங்கம் கணேசலிங்கம்,உப செயலாளர் திருமதி சுபாசினி ஜெனன்,உப தலைவர் க.திருநாவுக்கரசு ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: webeditor