தமிழகத்தில் பொலிசாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்ற இலங்கை கைதி!

தமிழகத்தில் இலங்கை கைதி ஒருவர் அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இலங்கையர் விழுப்புரம் – பேரணி பிரதேசத்துக்கு அருகே சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு தப்பியோடியவர் திருகோணமலை சேர்ந்த 39 வயதான ரியாஸ் கான் ரசாக் ஆவார்.

குறித்த நபரை அதிகாரிகள் மதுரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

பின்னர் மீண்டும் புழல் சிறைக்கு அவரை அழைத்துச்செல்லும் வழியில், பேரணி என்ற இடத்தில் விடுதியொன்றுக்கு அருகில் இரவு உணவுக்காக வாகனத்தை நிறுத்தியபோது, கைதி தப்பி ஓடியுள்ளார்.

திருட்டு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் மற்றும் கடவுச்சீட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றங்களுக்காக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்து விசேட குழுக்கள், இலங்கை தமிழ் ஏதிலி முகாம்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன

Recommended For You

About the Author: webeditor