யாழில் திடீரென பற்றி எரிந்த புடவைக்கடை

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் புடவை கடை ஒன்று தீயில் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்றைய தினம் இரவு (27-02-2023) இடம்பெற்றுள்ளது.

திடீரென தீப்பற்றிக்கொண்ட குறித்த புடவைக்கடையில் பல இலட்சம் பெறுமதியான புடவைகள் தீயில் எரிந்து சேதமாகின.

தீயை அணைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தீ கட்டுப்பாட்டுக்குள் வர கால தாமதமாகியதால் கடைக்குள் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor