இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்ப்பாணம் –  அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் எஸ்.ஜே.அனுரா அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் இளைப்பாறிய அதிபர் சபாரத்தினசிங்கி அவர்கள் பிரதம அதிதியாகவும், கௌரவ விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவர் திரவகயராசா அவர்களும் கலந்துகொண்டனர்.

மங்கள விளக்கேற்றி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அணிநடை, மைதான நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றன.

இந் நிகழ்வில் கல்லூரியின் அதிபர், விருந்தினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN