எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கியூ.ஆர் குறியீட்டு முறை தொடர்பில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

கியூ.ஆர் குறியீட்டு முறை

அத்துடன், ஏப்ரல் 10ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க NFP தரவு பகுப்பாய்வு செய்யப்படும்.

அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சகம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த அமைப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்குள் எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor