தனது முன்னாள் காதலியான பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

தனது முன்னாள் காதலியான பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பை அண்டிய மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கடந்த வாரம் வரை எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் காதல் தொடர்பைக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த வாரம் தனது காதல் தொடர்பை இடைநிறுத்தியுள்ளார்.

அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் அதிகாரி
இதனையடுத்து பெரும் ஆத்திரம் கொண்ட ஆண் பொலிஸ் உத்தியோகத்தர் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது காதலி உட்பட இன்னும் பலரையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

அத்துடன் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸார் தங்கியிருக்கும் விடுதிக்கும் சென்று கதவை உடைப்பதைப் போன்று ஓங்கி கதவை தட்டி அழிச்சாட்டியம் செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த ஆண் பொலிஸ் உத்தியோகத்தரை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor